உலகம்செய்திகள்

பப்ஜி விளையாட்டு மோகம் – குடும்பத்தினரின் உயிரைப்பறித்த சிறுவன்!!

shooting

பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த 14 வயது சிறுவன், தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் சிறுவனின் குடும்ப உறுப்பினர்களான தாய், சிறுவனின் சகோதரர் மற்றும் இரு சகோதரிகள் ஆகியோர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவனே தனது குடும்ப உறுப்பினர்களை சுட்டுக்கொன்றமை தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணையில், பப்ஜி விளையாடியதைத் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக சிறுவனின் தாய் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button