இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!!

Shooting

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றிரவு கடமையில் நின்ற இராணுவத்தினருடன் பொதுமகன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போது கைகலப்பாக மாறிய நிலையில், இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Back to top button