இந்தியாசெய்திகள்முக்கிய செய்திகள்

சாந்தனின் கடவுச்சீட்டு மீண்டும் ஒப்படைப்பு!!

Shantan's passport

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செயயப்பட்டுள்ள  சாந்தனிடம் இருந்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்த கடவுச்சீட்டு, மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 அதிகாரிகள், அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து  சென்னை அமர்வு நீதிமன்றில் சமர்பித்தனர். 

தற்போது  விடுதலையான சாந்தன், தனது கடவுச்சீட்டு, 1995-ம் ஆண்டே காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிப்பதற்காக திருப்பி த்தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தங்கமாரியப்பன் முன்னால் இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்சி முகாமில் இருந்த சாந்தன் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சாந்தனின் பெயர் உள்ளிட்டவற்றை சரிபார்த்த பின்னர் கடவுச்சீட்டை திருப்பிக் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிமன்றுக்கு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் குறித்த கடவுச்சீட்டை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button