கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

வெற்றிகரமாக இடம்பெற்ற ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு!!

Seminar

அமரர். ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்த மாக தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக  ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் கருத்தரங்கின் முதலாம் நாள் வழிகாட்டல் வகுப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. 

குறித்த கருத்தரங்கில் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் திரு. சிவ.தீபன் அவர்களின் வழிகாட்டல் வகுப்புகள் இடம்பெற்றன. ஐவின்ஸ் தமிழ் இணையதளத்தின் கல்விப் பகுதி பொறுப்பாசிரியர் திரு. இ. ஜனதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் 

முதல் நிகழ்வாக அன்பழகன் ஆத்ம சாந்தி வேண்டி  அகவணக்கம் இடம்பெற்றது, பின்னர், பிரதம விருந்தினரான ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் திரு. செ. மகேஸ் அவர்களினால் அமரர் அன்பழகன் ஞாபகார்த்த உரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து,  கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆரம்ப நிகழ்வில் 550 க்கு மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் சூம் ஊடாக நேரடியாக இணைந்து கொண்டனர்.

நாடு முழுவதும் 10 000 இற்கு மேற்பட்ட வினாத்தாள்கள்  பிரதி செய்யப்பட்டு பல்லாயிரம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்  என்பதுடன் இக்கருத்தரங்கினை பாடசாலை ரீதியாக மாணவர்கள் குழுவாக இணைந்திருந்து இணையத்திரையில் கற்றுள்ளதாகவும் எமக்கு அறிய  கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button