வெற்றிகரமாக இடம்பெற்ற ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு!!
Seminar
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0003-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
அமரர். ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்த மாக தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் கருத்தரங்கின் முதலாம் நாள் வழிகாட்டல் வகுப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0001-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
குறித்த கருத்தரங்கில் பிரபல புலமைப்பரிசில் ஆசிரியர் திரு. சிவ.தீபன் அவர்களின் வழிகாட்டல் வகுப்புகள் இடம்பெற்றன. ஐவின்ஸ் தமிழ் இணையதளத்தின் கல்விப் பகுதி பொறுப்பாசிரியர் திரு. இ. ஜனதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில்
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0004-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
முதல் நிகழ்வாக அன்பழகன் ஆத்ம சாந்தி வேண்டி அகவணக்கம் இடம்பெற்றது, பின்னர், பிரதம விருந்தினரான ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் திரு. செ. மகேஸ் அவர்களினால் அமரர் அன்பழகன் ஞாபகார்த்த உரை நிகழ்த்தப்பட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0005-1024x768.jpg?resize=351%2C264&ssl=1)
தொடர்ந்து, கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆரம்ப நிகழ்வில் 550 க்கு மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் சூம் ஊடாக நேரடியாக இணைந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0006-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
நாடு முழுவதும் 10 000 இற்கு மேற்பட்ட வினாத்தாள்கள் பிரதி செய்யப்பட்டு பல்லாயிரம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர் என்பதுடன் இக்கருத்தரங்கினை பாடசாலை ரீதியாக மாணவர்கள் குழுவாக இணைந்திருந்து இணையத்திரையில் கற்றுள்ளதாகவும் எமக்கு அறிய கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0009-1024x768.jpg?resize=396%2C297&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/09/IMG-20230908-WA0010-1024x768.jpg?resize=392%2C295&ssl=1)