![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/IMG-20230508-WA0005.jpg?resize=454%2C527&ssl=1)
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி கருத்தரங்கில் இன்றைய தினம் ( 08.05.2023 திங்கட்கிழமை ) தமிழ் பாட கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
யாழ். நகர முன்னணி ஆசிரியரான தமிழ்ச்சுடர் திரு க.மு. நித்தி
(ஆசிரியர்,யா/புனித பத்திரிசியார் கல்லூரி) அவர்கள், பரீட்சைக்கான எதிர்பார்ப்பு வினாக்கள் குறித்தும் விடையளிக்கும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கவுள்ளார்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/IMG-20230501-WA0010-2-723x1024.jpg?resize=708%2C1003&ssl=1)
இக் கருத்தரங்கானது மட்டுவில் வளர்மதி யூரியூப் தளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படவுள்ளதால் நாடு பூராகவுமுள்ள மாணவர்களின் இணைந்து பயன்பெறுமாறு மட்டுவில் வளர்மதி கல்விக் கழகத்தினரும் ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் கல்விப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.