கல்விசெய்திகள்

இன்றைய கருத்தரங்கில் யாழ். நகர முன்னணி ஆசிரியர் தமிழ்ச்சுடர் திரு.க. மு. நித்தியின் தமிழ் பாட கருத்தரங்கு!!

Seminar

ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும்  சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான நேரடி கருத்தரங்கில் இன்றைய தினம் ( 08.05.2023 திங்கட்கிழமை ) தமிழ் பாட கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

யாழ். நகர முன்னணி ஆசிரியரான தமிழ்ச்சுடர் திரு க.மு. நித்தி
(ஆசிரியர்,யா/புனித பத்திரிசியார் கல்லூரி) அவர்கள், பரீட்சைக்கான எதிர்பார்ப்பு வினாக்கள் குறித்தும் விடையளிக்கும் முறைகள் குறித்தும் தெளிவாக விளக்கவுள்ளார்.

இக் கருத்தரங்கானது மட்டுவில் வளர்மதி யூரியூப் தளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படவுள்ளதால் நாடு பூராகவுமுள்ள மாணவர்களின் இணைந்து பயன்பெறுமாறு மட்டுவில் வளர்மதி கல்விக் கழகத்தினரும் ஐவின்ஸ் தமிழ் இணைய தளத்தின் கல்விப் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button