![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/22-6333dbbdf2a7d.jpeg?resize=600%2C400&ssl=1)
இலங்கையில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகிறது என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 8 000 பாடசாலைகளில் ஒரு நேர உணவு வழங்கப்படுவதாகவும் ஏனைய பாடசாலைகளில் தனியாரதுறையினரின் உதவியுடன் உணவு வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்த அவர் மாணவர்கள் கொண்டு வரும் உணவின் போசாக்கு நிலை தொடர்பில் ஆசிரியர்கள் கவனம் எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.