இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாடசாலைக் கற்றல் நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

schools

எதிர்வரும் 25 ஆம்திகதி திங்கட்கிழமை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழிக் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button