இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி தொடர்பில் வெளியான தகவல்!!

Scholarship Exam

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளியை பகிரங்கப்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த யோசனை, கல்வி ஆலோசனைக் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெட்டுப்புள்ளி முறைமையானது, மாணவர்களுக்கு அவசியமான பாடசாலைகளைத் தெரிவுசெய்வதற்கு வாய்ப்பை வழங்கும் என்பது கல்வி ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையினரின் கருத்தாக முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி, பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களினதும், அவர்களின் பெற்றோர்களினதும் எதிர்பார்ப்பை தகர்க்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதன்போது கல்வி அமைச்சருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

இதற்கமைய, வெட்டுப்புள்ளியை பகிரங்கப்படுத்த வேண்டாம் என முன்வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button