இலங்கைசெய்திகள்

20,000 மெட்ரிக் டன் அரிசி மியன்மாரிலிருந்து இறக்குமதி!!

rice

அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் மியன்மாரில் இருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு மெட்ரிக் டன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இலங்கை அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான இருப்பை பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதன்பிரகாரம் இவ்வாறு மியன்மாரிடமிருந்து அரிசி கொள்வனவு செய்ய வர்த்தக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button