![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/22-623adce4965cf-1024x473.jpg?resize=708%2C327&ssl=1)
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டமை, நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழிலில் ஈடுபட்டமை, மற்றும் தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை ஆறுமாதகால சாதாரண சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டார்.