![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/09/image_664a610470.jpg?resize=708%2C399&ssl=1)
புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய, இந்தியாவில் ஏதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காகவசதிகளை முன்னெடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.