இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

முக்கிய வழக்கிலிருந்து ரணில் விடுவிப்பு!!

Ranil wickramasinghe

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனுமீதான விசாரணை இன்று இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த போதிலும், அவருக்கு எதிராக மனுதாரர்கள் நிவாரண கோரிக்கை முன்வைக்காமை காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட குழுவினரால் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button