இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பிரபல பேச்சாளர் செந்தமிழ் சொல்லருவி திரு. லலீசன் ஆசிரிய கலாசாலை முதல்வராக பதவி உயர்வு!!

Promotion

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதலவராக  சந்திரமெளலீசன் லலீசன்  பதவியுயரவு பெற்றுள்ளார்.

கலாசாலையின்,  முதல்வராக கடமையாற்றிய திரு கருணைலிங்கம் அவர்கள்  ஓய்வு பெற்றுள்ள நிலையில், பிரதி அதிபராக கடமையாற்றிய லலீசன் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்மராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட  இவர் விஞ்ஞான பாட ஆசிரியராக ஆசிரியத்துறைக்குள் நுழைந்து 

பல மாணவரகள் உயர்பெறுபேறு அடைய பங்களித்ததுடன் பின்னர் தமிழிலும் சமயத்திலும் பாண்டித்தியம் பெற்று தேசிய போட்டிப்பரீட்சையில் சித்தி பெற்று ஆசிரியரகளுக்கே கற்பிக்கும் வளவாளராக ஆசிரிய கலாசாலையில் இணைந்தார்.

 அத்துடன் இவர்  பேச்சாளராகவும் பிரபலம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.. ஆசிரியரகளுக்கு உளவியலையும் மொழியியலையும் கற்பிப்பதில் சிறப்பு.   பெற்ற இவர்,

எமது இணையத்தளம் நடாத்தும் பல மாணவர் நலன் சாரந்த கலுத்தரங்குகள் ஊடாக மாணவரகளுக்கும் பெற்றோர்களுக்கும் பல வழிகாட்டல்களை வழங்கிவருவதும் சிறப்பம்சம் ஆகும். இந்நிலையிஇவரை வாழத்துவதில் எமது இணையத்தளமும் அகமகிழ்கிறது

Related Articles

Leave a Reply

Back to top button