இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பிரியந்த கொலையாளிகளுக்கு தூக்கு!!

Priyantha Kumara

இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் வைத்து கடந்த வருடம் டிசம்பர் 3ஆம் திகதி அடித்து கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தார்.

அத்துடன், பிரியந்த குமார அடித்துக் கொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனயும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button