இன்றைய சந்திப்பில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை – முன்பள்ளி ஆசிரியர்கள்!!
Preschool teachers
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/IMG_1153.jpg?resize=708%2C398&ssl=1)
முன்பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் முன்பள்ளி ஆசிரியர்களைச் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 10 நாட்களாக வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் வடக்கு மாகாண ஆளுநர் கொழும்பில் நிற்பதனால் அவரின் செயலாளருடன் வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் எந்தவித ஆக்கப்பூர்வமான முடிவும் எட்டப்படவில்லை என முன்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சந்திப்பின் போது எந்தவிதமான ஆக்கப்பூர்வமான முடிவும் எட்டப்படவில்லை. எதிர்காலத்தில் தொடர்ச்சியாகப் போராட்டத்தினை முன்னெடுப்பதன் மூலமே தமக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.