இலங்கைசெய்திகள்

மின் தடை தொடர்பில் இன்றைய முடிவு!!

Power cut

இந்த நேரத்தில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலமும் இரு மணித்தியாலங்களும் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இல்லையெனில், ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டை தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர்.

நீர் மின் உற்பத்தி 25 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ள தாகவும், மின் உற்பத்திக்கு நீரை பயன்படுத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக் கங்களில் நீர் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 60% ஆக குறைந்துள்ள தாகவும், அது 40%க்கு கீழ் குறைந்தவுடன் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எரிபொருளை வாங்குவதற்கு டொலர் கிடைக்காத தாலும், தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் அவசர கொள்முதலின் கீழ் அதிக விலைக்கு மின்சாரம் பெற முடியாததாலும் தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button