இலங்கைசெய்திகள்

சுவரொட்டிகள் மூலம் ஏழை விவசாயிகளின் காணி அபகரிப்பு குறித்து அறிவிப்பு!!

Posters

மடுக்கோவிலுக்கு 7000 ஏக்கர் காணி இருக்கின்றபோதும் ஏழை விவசாயிகளின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக சுட்டிக்காட்டி சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் சாவகச்சேரி, கோப்பாய்ச்சந்தி, கள்ளியன்காட்டுசந்தி போன்ற பகுதிகளில் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த சுவரொட்டிகளில், மடுக்கோவிலுக்கு 7000 ஏக்கர் காணி இருக்கின்ற போதும் ஏழை விவசாயிகளின் காணியை அபகரிக்க ஷிரந்தி ராஜபக்ச மற்றும் எம்.பி காவிந்த ஜெயலத் ஜெயவர்த்தனவிடம் மண்டியிடும் மடு பப்பி பங்குத்தந்தை என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுவரொட்டிகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button