இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் நஷ்டம்!!
Postal departments
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/post-700x375-1.jpg?resize=700%2C375&ssl=1)
தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால் சுமார் 400 வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கியுள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக தபால் சேவை தற்போது செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரமே இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.