இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள கோரிக்கை!!

police

சென்ற வாரம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அந்த நேரத்தில் பல வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அவ்வேளை நிலவிய நெருக்கடியான சூழ்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொள்ளையடித்தவர்கள் மற்றும் சொத்துக்களைத் திருடியவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

தகவல் தெரிவிக்க விரும்புவோர் 1997 மற்றும் 119 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தகவல் வழங்குவோரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button