இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பொலிசாருக்கு வந்த தடை உத்தரவு!!

Police

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதனையிடும் நடவடிக்கையில் பொலிஸாரை ஈடுபடுத்தவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

களனி – சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தக பைகளை சோதனையிட வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அது பாடசாலைகளுக்கு உரித்தான பொறுப்பு என தெரிவித்த அவர், பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button