இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பொலிஸாரின் விசேட அறிவிப்பு!!

police

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை பொலிஸாரால் 2018ஆம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைத் தடுக்க 180,000 சாதனங்களைக் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது அவை தீர்ந்துவிட்டன. இப்போது நாங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை மட்டுமே கைது செய்கிறோம்.

எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்ய 160 மில்லியன் ரூபாவை பொலிஸாருக்கு தேசிய வீதி பாதுகாப்பு சபை வழங்கியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button