![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62a6ca0d11932.jpeg?resize=600%2C400&ssl=1)
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.
வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தைப் பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது .
இதேவேளை இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறியப்படுத்துமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகரகம பகுதியில் இவ்வாறான மோசடிச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.