இலங்கைசெய்திகள்

எரிபொருளுக்காக காத்திருப்போரிடம் மோசடிக்காரர் கைவரிசை!!

Police

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து  பொலிஸார் அவசர அறிவித்தலொன்றை வழங்கியுள்ளனர்.

வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தைப் பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது .

இதேவேளை இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தமக்கு அறியப்படுத்துமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகரகம பகுதியில்   இவ்வாறான  மோசடிச் சம்பவமொன்று  பதிவாகியுள்ளதாகவும்  பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button