இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த குற்றவாளி பொலிஸாரினால் சுட்டுக்கொலை!!

police

குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த உலக பாதாளக்குழுவின் முக்கிய உறுப்பினர் ‘டிங்கர் லசந்த’ என அழைக்கப்படும் ஹேவாலுனுவிலகே லசந்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை -தியகம பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபருக்கு சொந்தமான கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றை பொலிஸார் தேடிச் சென்றிருக்கின்றனர்.

அப்போது சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் பதில் தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இச்சம்பவத்தில் மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.களுத்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் இருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட நபர் பாதாள உலகக்குழு உறுப்பினரான சன்ஷைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

Related Articles

Leave a Reply

Back to top button