உலகம்செய்திகள்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் இறங்கிய போலந்துப் பெண்கள்!!

Poland

தற்போது உலகம் முழுக்க பேசுபொருளாகியிருப்பது போலந்து பெண்களின் துப்பாக்கி சுடும் பயிற்சிப் படங்கள் தான்.
போலந்துப் பெண்கள் தங்களது கைகளில் ஏகே-47 துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தக் காட்சிகள் பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் உள்ளது. போலந்து நாட்டின் சில படைகள் உக்ரைனுக்கு ஆதரவாக உக்ரைன் நாட்டிற்குள் சென்று போரில் உதவி வருகின்றனர். இதற்காக ரஷ்யா போலந்து மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் போலந்து நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தங்களுடைய குழந்தைகள் மற்றும் சொந்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு போலந்து பெண்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியைப் பார்த்து உலக நாடுகளே வியப்பை வெளியிட்டு வருகின்றன. இதனால் போலந்து நாட்டின் ஆயுதம் குறித்த சட்டமுறைகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button