கவிதைமுத்தமிழ் அரங்கம்.

ஒரு ஆத்மாவின் ஆலாபனை – அருமைத்துரை காயத்திரி!!

poem

விசித்திரங்களில் பரிதவிக்கும்
ஒரு ஆத்மாவின் விடுதலை
மனதை தாழிட்டு
மூடிக்கொண்டது. . .
வார்த்தைகளை
தேடிய பொழுதுகளில்
விசும்பிடை பட்சியாக;
சிறகடித்தது. . . .
புதிய தேடலை மாத்திரம்
மனதுடன்
அப்பிக்கொண்டது
நினைவோட்டம். . . .
மடலின் வாசனையில்
மடந்தையின்
மனவியல் சாயங்கள்.
வளைந்திருக்கும்
வளையல்களில்
வானவில்லாக
வளைகிறது. . . . .
உனக்காவும்
எனக்காகவும். . .

Related Articles

Leave a Reply

Back to top button