![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/202202050539035949_Tamil_News_At-least-seven-people-have-died-after-a-light-aircraft_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
பெரு நாட்டில், இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.
நஸ்கா (Nazca) நகரில் உள்ள மரியா ரீச் (Maria Reiche) விமான நிலையத்தில் இருந்து பயணித்த செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது 5 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.