![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/basil.jpeg?resize=708%2C344&ssl=1)
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தியா தமது பொருளாதார திட்டங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இதன்போது நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.