இலங்கைசெய்திகள்

21ம் திருத்தம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள நடவடிக்கை!!

Parliment

இலங்கையில் 21வது திருத்தம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை ஒப்புதல் பெறும் தீர்மானம் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை உத்தேச 21ஆம் திருத்தச் சட்டம் குறித்து சில கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இந்த தெளிவுபடுத்தல்களின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் 21ஆம் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button