இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஒமிக்றோன் இலங்கைக்குள்ளும் நுழைந்தது!!

Omicron

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே ஒமிக்ரான் கொரோனா திரிபுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸானது பல நாடுகளில், பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக பலநாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதுடன், சர்வதேச போக்குவரத்தினையும்  முடக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்றையதினம் இந்தியாவில்  ஒமிக்ரான் தொற்றுடைய இருவர் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button