இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

O/L exam

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sunil Premajayantha) , 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2023) ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (20-11-2022) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இத் தகவலைத் தெரிவித்தார்.

O/L பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரலில் நடத்த எதிர்பார்த்தாலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையால், மேலும் தாமதங்கள் தவிர்க்க முடியாதவை எனவும் பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கத் தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button