![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/22-623dbcdd6f5e0.jpg?resize=708%2C398&ssl=1)
தனியார் பேருந்து உரிமையாளர்கள் நுவரெலியா பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, குறித்த பகுதியில், நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகின்றது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் எரிபொருள் கோரியே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு – புத்தளம் வீதிப் போக்குவரத்தும் மதுரங்குளி நகரில் தடைப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.