![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_6824.jpeg?resize=708%2C398&ssl=1)
சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய ஆறுமுகநாவலரின் நினைவுநாள் நிகழ்வு வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று (05) அனுஸ்டிக்கபட்டது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_6816-1.jpg?resize=708%2C398&ssl=1)
வவுனியா நகரசபை மற்றும் உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_6841.jpeg?resize=708%2C398&ssl=1)
இதன்போது நாவலரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அடிகளார் தொடர்பான சிறப்புரையினை தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் நிகழ்த்தினர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_6846.jpeg?resize=708%2C531&ssl=1)
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, சுமந்திரன், சு.காண்டீபன், உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கு.நந்தகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/IMG_6852.jpeg?resize=708%2C531&ssl=1)
செய்தியாளர் கிஷோரன்