இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

கர்ப்பிணி தாய்மாரை சேவைக்கு அழைக்க வேண்டாம்…

கர்ப்பிணி தாய்மாரை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளா் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ,இதுவரையில், நாட்டில் கொரோனா நிலைமை முழுமையாக குறைவடையா நிலையில் கர்ப்பிணி தாய்மாரை சேவைக்கு அழைப்பது ஆபத்தான நிலைமையாகும் என்றும் அந்த மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் ,வரையறைகளுக்கு அமைய அவர்களை சேவைக்கு அழைப்பதற்கு செயலாளா் தெரிவித்துள்ளமை கர்ப்பிணி தாய்மார்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு வழிவகுக்குமென அந்த மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button