இலங்கைசெய்திகள்

ரணிலிடம் உதவி கேட்டாரா நித்தியானந்தா!!

Nityananda

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய சாமியார் நித்தியானந்தா கடிதம் எழுதியதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, ‘தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும்’ கோரியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கபூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் , நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button