இலங்கைசெய்திகள்

இவ்வருடத்துக்குள் உள்ளூராட்சித் தேர்தல்! – ஆணைக்குழு தெரிவிப்பு

இவ்வாண்டு இறுதிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் நடத்தப்பட்டால் அது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படும்.

தேர்தல் நடத்துவது குறித்து உத்தியோகத்தர்களைப் பயிற்றுவித்தல், வாக்குச் சாவடிகள் நிறுவுதல் குறித்த ஆரம்பகட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தில் சட்டங்களை அமுல்படுத்துவது குறித்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தெளிவூட்டல் செய்யும் நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button