இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (11.07.2024 – வியாழக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மனித எச்சங்கள் மீட்பு!! 

நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. 

2.

மற்றொருமொரு அறகலயவின் ஆரம்பமே தொடரும் பணிப்புறக்கணிப்புகள்!!

தற்போது தொடர்ந்துகொண்டிருக்கும் பணிப்புறக்கணிப்புகள் மற்றுமொரு அறகலயவின் ஆரம்பம் எனவும் இது பாராளுமன்றத்தை எரிப்பதற்கு கூட வழி செய்யலாம் எனவும் அரசாங்க பேச்சாளரும் போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்த்தன பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்துள்ளார். 

3.

எம். பி. க்களாலேயே பாராளுமன்ற குழுத்தலைவர் தீர்மானிக்கப்படுவார்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் தொடர்பாக பாராளுமன்றக்குழு தீர்மானிப்பதே பொருத்தமாக இருக்கும் என மா. வை.  சேனாதிபதி ராஜா தெரிவித்துள்ளார். 

4.

போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

5.

சஜித்துடன் இணையும் டயஸ்!! 

சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

6.

தேர்தலை ஒத்திவைக்க சூழ்ச்சி!!

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் புதிய சூழ்ச்சியை மேற்கொள்வதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 

7.

நாட்டை முன்னேற்ற தேரர்களின் வழிகாட்டலைக் கோருகிறார் ஜனாதிபதி!!

நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லவும் சிறந்த அரசியல் பொருளாதார முறைமைகளை உருவாக்கவும் மகாசங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் அவசியம் என 4000 பிக்குகள் மத்தியில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

8.

சிறார் இல்லங்கள் தொடர்பில் ஆளுநரின் அறிவிப்பு!!

வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய சட்ட ஒழுங்கு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். 

9.

சட்டப்படி இப்போதும் நான்தான் வைத்திய அத்தியட்சகர் – வைத்தியர் அர்ச்சுனா!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சட்டத்தின் படி தற்போதும் நான் தான் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். 

10.

13 வயது பாடசாலை மாணவி தற்கொலை!!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் மோகராஜ் கிருத்திகா என்கிற  13 வயதான  பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி 

Related Articles

Leave a Reply

Back to top button