இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (10.07. 2024 – புதன்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க செய்திகள்!!

News

1.

சம்பள உயர்வு அறிவிப்பு!!

நாட்டில் ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரண்டு நாட்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய அத்தியாட்சகர்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம்  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

3.

எம். பி. செல்வம் அடைக்கலநாதனை பாராளுமன்ற குழுத்தலைவராக்குமாறு கோரிக்கை!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக  தெரிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

4.

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் பணிகள் முன்னெடுப்பு!!

2025ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையை முன்னெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

5.

அரச சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம்!!

நேற்றையதினம் 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச சேவைகள் முற்றாக முடங்கியிருந்தன. 

6.

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு கோரிக்கை!!

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சுகாதார அமைச்சு விரைவில் தீர்வு தரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி 

Related Articles

Leave a Reply

Back to top button