செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு

வலைப்பந்தாட்ட அணிக்குத் தெரிவாகிய வடமராட்சி மாணவிகள் – விளையாட்டுத் துறையினர் பாராட்டு!!

Netball

இலங்கை வலைப் பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட கனிஷ்ட வலைப்பந்தாட்ட அணிக்கான தெரிவில் யா/வட.இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வலைப் பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட கனிஷ்ட வலைப்பந்தாட்ட அணிக்கான தெரிவு அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்டத்தில் வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த வசந்தன் ஆர்த்திகா மற்றும் பாலச்சந்திரன் பானுஜா இரண்டு பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாடசாலை காலத்தில் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்களான திருமதி.ட.அனுசியா, திருமதி.நி. விஸ்வேரிகா, மற்றும் பயிற்றுவிப்பாளர் திருமதி.வ.சிவரஞ்சனி ஆகியோரும் தகுதிகாண் பயிற்சியினை மாவட்ட வலைப்பந்தாட்டப் பயிற்றுனர் சார்பாக சி.மனோன்மணி அவர்களும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது

தெளிவான மாணவிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button