இலங்கைசெய்திகள்

மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் நாமல் ராஜபக்‌ஷ!!

Namal Rajapaksa

எங்கள் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் அவசியம். காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாகவும் அதிகாரிகளின் நேர்மையற்ற செயற்பாடுகள் காரணமாகவும், சிறந்த தலைமைத்துவமாகச் செயற்பட முடியாத நிலை காணப்பட்டது. ஜனாதிபதியும், அரசாங்கமும் தங்கள் திட்டங்கள் குறித்து மக்களுடன் அதிக வெளிப்படை தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். மக்களின் கோபத்தினை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்த ஆத்திரம் பயனற்றது, அது மேலும் நெருக்கடிகளையே ஏற்படுத்தும்.

அத்துடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடிய சுற்றுலாப் பயணிகள் வருகையை அது தடுத்து நிறுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button