![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/muttiah-muralitharan45-1602848014.jpg?resize=600%2C338&ssl=1)
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தீர்வு தரும் வரை மக்கள் அமைதியாக இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும்
அரசாங்கம் உங்கள் செய்தியைப் பெற்றுக்கொண்டுள்ளது , அவர்களின் தீர்வுகளுக்காக காத்திருப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.