செய்திகள்தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்

புதியவகை மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!!

motorcycle

புதிய வகை மோட்டார் சைக்கிள் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வாக இயாஸ் பசூல் என்பவரே இந்த மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிளை சாதாரண சைக்கிளாகவும் சார்ஜ் செய்தும் பயன்படுத்த முடியும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யமுடியும்.

மற்ற முறையில் மோட்டார் சைக்கிளாக பயன்படுத்தியும் பயணிக்க முடியும். அந்த முறையில் 30 கிலோ மீற்றர் பயணிக்க முடியும். 4 மணித்தியாலங்கள் இதனைச் சார்ஜ் செய்தால் அரை யுனிட் மாத்திரமே செலவாகும்.

தலைகவசம், அனுமதிப் பத்திரம் எதுவும் தேவையற்ற இந்தச் சைக்கிள் இணையத்துடன் இணைகின்றது. இதனைக் .கையடக்கத் தொலைபேசிகள் மூலம் செயற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button