இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பல்கலைக்கழக மாணவியைக் காணவில்லை – காவல்துறையில் முறைப்பாடு!!
Missing
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/05/23-64756949183c9.jpeg?resize=600%2C400&ssl=1)
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை எனப் பெற்றோரால் முறைப்பாடு வழங்கப்படுள்ளது.
நேற்று முன்தினம் முதல், களுத்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய குறித்த மாணவி காணாமல் போயுள்ளார் என காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
கற்றல் வகுப்பிற்குச் சென்ற நிலையில் இவரைக் காணவில்லை எனவும் அவரது தொலைபேசி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது