இலங்கைசெய்திகள்

காணாமல்போயிருந்த பெண்கள் கண்டுபிடிப்பு!

missing

சிங்கராஜ வனப்பகுதியில், சூரியகந்த – அளுத் இல்லம பகுதியில் ஏலக்காய் பறிக்கச்சென்று காணாமல்போயிருந்த இரு பெண்கள் தெனியாய விஹாரஹேன பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகளால் இன்று (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கொலொன்ன, இத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களே நேற்றுமுன்தினம் இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

இவர்களை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் நேற்று முதல் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button