இலங்கைசெய்திகள்

நாட்டை முடக்க நேரிடலாம்! – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!!

ministry of health

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை முடக்க நேரிடலாம்.

எனினும், தற்போதைக்கு அவ்வாறான ஒரு தேவை ஏற்படவில்லை.

கொரோனாப் பரவுகை நிலைமை மோசமடையாதிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

நாட்டில் கொரோனா மரணங்களில் தளம்பல் நிலை காணப்படுகின்றது. அண்மைய நாட்களாக இந்த மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஓமிகோர்ன் திரிபால் இலங்கைக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து எதிர்வுகூறல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது.

தென்னாபிரிக்காவுடன் நேரடியான விமானப் போக்குவரத்துச் சேவை கிடையாது” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button