![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-62750334b0920-md.webp?resize=360%2C240&ssl=1)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் நாலக கொடஹேவ அறிவித்துள்ளார்.
அரசாங்கம் பதவி விலகவேண்டும் எனக்கோரி இன்று நாடு முழுவதும் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அமைச்சரவை சிறப்புக் கூட்டம் இடம்பெறுகிறது.