இலங்கைசெய்திகள்

ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை பதிலளித்துள்ளது!!

Michelle Bechlet

இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் முன்வைக்கவுள்ள அறிக்கைக்கு இலங்கை தமது பதிலை வழங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு கிடைக்கப்பெற்றது.

இதில் பயங்கரவாத தடை சட்ட நீக்கம், ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button