இலங்கைசெய்திகள்

கணவனைப் பிரிந்து வேறு ஒரு ஆணுடன் குடும்பம் நடத்திய பெண் சடலமாக மீட்பு- முல்லைத்தீவில் அவலம்!!

merder

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு காணி ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பூதன் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய யோகராசா றாஜினி என்ற இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவரை பிரிந்து வேறு ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு ஒரு ஆணுடன் வாழ்ந்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்தவர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button