இலங்கைசெய்திகள்

புங்குடுதீவில் இடம்பெற்ற கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு!!

Memorial day

தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் யாழ் /புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயம் மற்றும் புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது .

புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக்கொண்டு கனடாவில் வாழ்ந்து அமரத்துவமடைந்த திருமதி.இரத்தினம் சதாசிவம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக திரு . சதாசிவம் மகாதேவன் (கனடா) அவர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழ் அரசுக் கட்சியின் கனடா கிளைத்தலைவர் சோமசுந்தரம் சச்சிதானந்தன் ஊடாக இச்செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன .
இந்நிகழ்வுகளில் கனடா துர்க்கையம்மன் ஆலய பிரதம குருக்கள் கிருஸ்ணராச ஐயர் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , தமிழ் அரசுக் கட்சி கனடா கிளை உபதலைவர் அகிலன் முத்துக்குமாரசுவாமி , அக்கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன் , யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மற்றும் ஓய்வுபெற்ற கிராமசேவகர் கா. கணேசலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button