![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0035.jpg?resize=708%2C361&ssl=1)
தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளையின் ஏற்பாட்டில் யாழ் /புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயம் மற்றும் புங்குடுதீவு சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது .
புங்குடுதீவு ஐந்தாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக்கொண்டு கனடாவில் வாழ்ந்து அமரத்துவமடைந்த திருமதி.இரத்தினம் சதாசிவம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக திரு . சதாசிவம் மகாதேவன் (கனடா) அவர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழ் அரசுக் கட்சியின் கனடா கிளைத்தலைவர் சோமசுந்தரம் சச்சிதானந்தன் ஊடாக இச்செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன .
இந்நிகழ்வுகளில் கனடா துர்க்கையம்மன் ஆலய பிரதம குருக்கள் கிருஸ்ணராச ஐயர் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , தமிழ் அரசுக் கட்சி கனடா கிளை உபதலைவர் அகிலன் முத்துக்குமாரசுவாமி , அக்கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளர் கருணாகரன் நாவலன் , யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மற்றும் ஓய்வுபெற்ற கிராமசேவகர் கா. கணேசலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0044-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0036.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0039.jpg?resize=708%2C531&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0040-768x1024.jpg?resize=708%2C944&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0043-1024x683.jpg?resize=708%2C472&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0041-1024x651.jpg?resize=708%2C450&ssl=1)
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG-20220522-WA0042-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)