இலங்கைசெய்திகள்

வவுனியா பல்கலைக்கழகமும் பட்டய பணியாளர் மேலாண்மை நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

Memorandum of Understanding

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வணிக கற்கைகள் பீட த்தின் மனிதவள முகாமைத்துவத் துறை மற்றும் பட்டய பணியாளர் மேலாண்மை நிறுவனம் என்பவற்றிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந் நிகழ்வானது வவுனியா பல்கலைக்கழக வணிக கற்கைகள் பீடத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன், வணிக கற்கைகள் பீடாதிபதி கலாநிதி வை. நந்தகோபன், மனிதவள முகாமைத்துவ துறையின் தலைவர் எஸ்.ஹரிகரன் ஆகியோர் வவுனியா பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் ஜயந்த அபேரத்ன, சமன் ஜயவிக்ரம, வீரதுங்க ஆகியோர் பட்டய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

செய்தியாளர் கிஷோரன்.

Related Articles

Leave a Reply

Back to top button