![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/viber_image_2022-04-20_20-10-04-244.jpg?resize=600%2C400&ssl=1)
இரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் முகக்கவச பயன்பாடு நீக்கப்படவில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முகக் கவசங்களை அணிவது கட்டாயமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது என்ற வகையில் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாவும் அது உண்மையில்லை எனவும் தெரிவித்த அவர் மருத்துவ தொழிநுட்பக் குழுவினரால், முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என பரிந்துரை செய்யப்பட்டதனடிப்படையிலேயே முககவச பயன்பாடு நீக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.